search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக போராட்டம்"

    • முக்கோணம் பகுதிக்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன.
    • ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆனைமலையில் இருந்து அ.தி.மு.க.வினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.

    வால்பாறை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கோவை மாவட்டம் ஆனைமலையிலும் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு அ.தி.மு.க.வினர் தயாராகி வந்தனர்.

    இதற்காக ஆனைமலை முக்கோணம் பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில், முக்கோணம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் சட்டவிரோதமாக வைத்ததாக கூறி அகற்றி, போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

    இதற்கிடையே இன்று காலை ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆனைமலையில் இருந்து அ.தி.மு.க.வினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.

    அவர்கள் முக்கோணம் பகுதிக்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன. பேனர்களை போலீசார் அகற்றியது தெரியவந்ததும், அ.தி.மு.கவினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி தலைமையில் ஆனைமலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.கவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அகற்றப்பட்ட பேனர்களை உடனே இங்கு வைக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டன.

    இதையடுத்து அ.தி.மு.கவினர் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க.வினரின் போராட்டத்தால் இந்த பகுதியில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இரவு நேரத்தில் தடாலடியாக சிலையை அகற்றுவதில் நோக்கம் அரசியல் கொண்டதாக உள்ளது என அன்பழகன் வாக்குவாதம் செய்தார்.
    • அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள வருவாய்த்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை-விழுப்புரம் சாலை வில்லியனூரில் இருந்து பெரம்பை செல்லும் சாலையின் புறவழிச்சாலையின் மையப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை இருந்தது.

    1998-ம் ஆண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த நடராஜன் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவினார்.

    வில்லியனூர் பகுதியில் புதுவை-விழுப்புரம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தை தடுக்க சாலை நடுவே பல கிலோ மீட்டர் தூரம் வரையில் சென்டர் மீடியன் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வில்லியனூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை அகற்றாமல் சாலையை விரிவுப்படுத்த முடியாது என்ற நிலையில் எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சப்-கலெக்டர் முரளிதரன் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஜி.ஆர். சிலையை அகற்றினர்.

    இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையிலான அ.தி.மு.க.வினர் யாரை கேட்டு சிலையை அகற்றி இருக்கிறீர்கள் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சிலையை அகற்ற அரசு அனுமதி கொடுத்திருந்தாலும் சிலையை அகற்றுவது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை. சொல்லியிருந்தால் அ.தி.மு.க.வினரே சிலையை அகற்றி கொடுத்திருப்போம்.

    இரவு நேரத்தில் தடாலடியாக சிலையை அகற்றுவதில் நோக்கம் அரசியல் கொண்டதாக உள்ளது என அன்பழகன் வாக்குவாதம் செய்தார்.

    அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை வில்லியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள வருவாய்த்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஏற்கனவே சிலை இருந்த இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் சாலையின் ஓரத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர். வருவாய்த்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலை அதிகாரிகள் வைக்கப் போவதாக சொன்ன இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அப்போது பேசிய அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், அகற்றப்பட்ட சிமெண்டால் ஆன எம்.ஜி.ஆர். சிலை வெண்கல சிலையாக மாற்றி வைப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். விரைவில் அரசு வெண்கல சிலையை அமைக்க வேண்டுமென கூறினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இன்று சாலை விரிவாக்க நடந்து வரும் நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆத்தூர் தலைமை மருத்துவமனைக்கு, நோயாளிகளின் வசதிக்காக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • ஆத்தூர் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை; நோயாளிகளுக்கு போதிய மருந்துகளும் வழங்கப்படுவதில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் சுமார் 13 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதுவே, அ.தி.மு.க. ஆட்சியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது.

    குறைவான தூய்மைப் பணியாளர்களால், தூய்மைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. நகரம் முழுவதும் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.

    நரசிங்கபுரம் நகராட்சிக்கு தனியாக கட்டிடம் கட்டுவதற்கு அம்மா ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 28 மாதங்களுக்குப் பிறகும் இன்னும் நிதி ஒதுக்கி, நகராட்சிக்கு தனியாக அலுவலகக் கட்டிடம் கட்டப்படவில்லை.

    தெரு விளக்குகள் எப்போதும் எரிவதில்லை. புகார் செய்தாலும் நடவடிக்கை இல்லை. தற்போது, ஆத்தூர் நகராட்சிக்கு பொறுப்பு ஆணையராக, விழுப்புரம் நகராட்சி ஆணையரை தி.மு.க. அரசு நியமித்து உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் பல நகராட்சிகள் இருந்தும், 2 மாவட்டங்கள் கடந்து தொலைவில் உள்ள விழுப்புரம் நகராட்சி ஆணையரை நியமித்துள்ளது மிகவும் வேடிக்கையான ஒன்றாகும். இதனால், ஆத்தூர் நகராட்சி ஆணையரை பொதுமக்கள் பார்ப்பது என்பது எளிதான காரியமன்று.

    அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட எனது ஆட்சியில், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசிஷ்ட நதியை சுத்தப்படுத்தும் அற்புதமான திட்டத்தை, இந்த தி.மு.க. அரசு கடந்த 28 மாதங்களாகக் கிடப்பில் போட்டுள்ளது.

    அதேபோல், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராசிபுரம் மற்றும் பெரம்பலூர் சாலையை இணைக்கும் உள்வட்டச் சாலை அமைக்கும் திட்டத்தையும் தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது.

    ஆத்தூர் தலைமை மருத்துவமனைக்கு, நோயாளிகளின் வசதிக்காக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது, ஆத்தூர் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை; நோயாளிகளுக்கு போதிய மருந்துகளும் வழங்கப்படுவதில்லை.

    ஆத்தூர் புதுப்பேட்டை-பெரம்பலூர் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 10 கோடி ரூபாய் அம்மாவின் அரசில் ஒதுக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 28 மாதங்கள் கடந்த பிறகும் இன்னும் ஒப்பந்தமே கோரப்படவில்லை.

    ஆத்தூர் நகராட்சிக்கு ஆணையர் இல்லை; பொறியாளர் இல்லை; பணி மேற்பார்வையாளர் இல்லை; நகர அமைப்பு அலுவலர் இல்லை; பணி ஆய்வாளர் இல்லை; வருவாய் ஆய்வாளர் இல்லை. இதன் காரணமாக, அனைத்து முக்கிய பணியிடங்களும் நீண்ட நாட்களாக காலியாகவே உள்ளது. இத்தனைக்கும் சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருப்பவர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. ஆனால், தமிழ்நாட்டிலேயே முக்கிய அதிகாரிகள் இல்லாமல் தடுமாறும் நகராட்சி ஆத்தூர் நகராட்சி. ஆத்தூர் நகர மக்கள் தங்கள் குறைகளை எங்கே சென்று சொல்லுவது என்பதுகூட புரியாமல் உள்ளனர்.

    இதே போன்று, தமிழகத்தில் உள்ள மற்ற நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தரமற்ற பழுதான சாலைகள், பழுதடைந்த மின் விளக்குகள், குடிநீர் பற்றாக்குறை, போதுமான எண்ணிக்கையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத நிலை ஆகியவற்றை இந்த தி.மு.க. அரசு விரைவில் நிவர்த்தி செய்யாதபட்சத்தில், அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளின் அவல நிலைமைக்குக் காரணமான தி.மு.க. அரசையும்; அமைச்சர் கே.என். நேருவையும் கண்டித்தும்; நகராட்சிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்டத்தின் சார்பில் 7.9.2023 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தக்காளி விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் பதாகைகளை ஏந்திய படி, தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    • போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தபடி கோஷமிட்டனர்.

    சென்னை:

    காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.

    சென்னை மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த கண்டன போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    போராட்டத்தின் போது விலைவாசி உயர்வுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தபடி கோஷமிட்டனர்.

    தக்காளி விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் பதாகைகளை ஏந்திய படி, தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை ஏற்றத்தின் போது அரசே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு அரசு குறைந்த விலையில் வழங்கியதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசினர்.

    போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், கமலக்கண்ணன், முன்னாள் எம்.பி.க்கள் ஜெயவர்த்தன் எஸ்.ஆர்.விஜயகுமார், சங்கரதாஸ், சசிரேகா, செய்தி தொடர்பாளர் சத்யன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, கே.பி.கந்தன், முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, மற்றும் பேரவை மாநில துணைச் செயலாளர் வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, இணைச் செயலாளர் டாக்டர் சுனில், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், வக்கீல் பழனி, தென் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சாமிநாதன், கடும்பாடி எ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சுகுமார், ஷேக் அலி, எஸ்.எம். சரவணன், இனியன், கதிர் முருகன், எம்.ஜி.ஆர்.நகர் குட்டி, மார்க்கெட் சுரேஷ், வசந்த குமார், வைகுண்டராஜன், மற்றும் வக்கீல் சதாசிவம், வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் திருமங்கலம் மோகன், கொளத்தூர் முன்னாள் பகுதிச் செயலாளர் கொளத்தூர் கணேசன், அபிராமி பாலாஜி, சேத்பேட் சம்பத்குமார், கன்னியப்பன், மாரிமுத்து, பாலாஜி, தசரதன், நித்யா, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தினால் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் சாலை அ.தி.மு.க. தொண்டர்களால் நிரம்பியது.

    ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மதுரவாயல் மின்சார அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளரும், மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, சிறுனியம் பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் அப்துல்ரகீம், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர், முன்னாள் எம்.பி. திருத்தணி அரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மணிமாறன், குப்பன், இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர்கள் இன்பராஜ், துண்டல் பாபு, ஜாவித் அகமது, எஸ்.பி.ஆர். கிஷோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக் கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது.
    • கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக தவறான தகவல்களை கூறி வருவதை புதுவை மாநில அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இதற்கு அ.தி.மு.கவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணாமலையை கண்டித்து உப்பளம் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை அ.தி.மு.கவினர் எழுப்பினர்.

    தொடர்ந்து நிருபர்களிடம் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:-

    தன்னுடைய தகுதி, உயரம் என்னவென்று தெரியாமல் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை கூறியுள்ளார். இது தி.மு.க.விற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க.வை பற்றி பேச அண்ணாமலைக்கு எந்தவித தகுதியும், அருகதையும் கிடையாது.

    அண்ணாமலைக்கு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக் கூடிய தலைமை பண்பு தேவைப்படுகிறது. கூட்டணி தர்மத்தை மீறி மலிவு விளம்பரத்திற்காக தவறான தகவல்களை கூறி வருவதை புதுவை மாநில அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

    கூட்டணியில் இருந்து கொண்டு அண்ணாமலை அ.தி.மு.க.வை பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்பும் வகையில் பேசுவது அபத்தமாகும். இதுபோல் அவதூறு பேசி வரும் அண்ணாமலையை தமிழக தலைவர் பதவியில் இருந்து பா.ஜனதா தேசிய தலைமை உடனடியாக நீக்க வேண்டும்.

    எதிர்காலங்களில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாத முடியாத நிலை ஏற்படும். 3 மாதத்திற்கு ஒரு முறை அண்ணாமலை இதுபோல் அ.தி.மு.கவை அவதூறாக பேசி வருகிறார்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.
    • மேகதாது விவகாரத்தில் நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது.

    மேலும், நான் முதலமைச்சராக இருந்த போதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.

    பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

    மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரளாக கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்.சி.எஸ்.பிரவீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர்.
    • முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தி.மு.க. அரசு பொய்யான வழக்கினை பதிந்து உள்ளது என கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத். இவர் தொழில் துறை அமைச்சராக இருந்த போது நேர்முக உதவியாளராக மேல் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் இருந்து வந்தார்.

    இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், அண்ணன் எம்.சி. தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமார் மாமனார் ராமச்சந்திரன் மற்றும் மாமியார் ஆகியோரை அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தாக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் தங்கமணி உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இத்தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. மேலும் தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருவதால் எந்தவித விசாரணையும் இன்றி முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என கடும் குற்றம்சாட்டி இருந்தனர்.

    இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரளாக கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்.சி.எஸ்.பிரவீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தி.மு.க. அரசு பொய்யான வழக்கினை பதிந்து உள்ளது என கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • மத்தியில் 15 ஆண்டாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தி.மு.க. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தற்போது 2 கட்சிகளும் புதுவை மக்களிடையே நாடகமாடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யூனியன் பிரதேசமான புதுவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் சட்ட விதிகளின்படி கவர்னரின் அதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்த சமயங்களில் மாநில வளர்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.

    ஆனால் வேறு, வேறு கட்சிகள் ஆட்சி செய்த போது அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகுவதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்படுகிறது. கவர்னர், முதல்-அமைச்சர் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது மாநில நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. ஜனநாயகமே கேள்விக்குறியாகிறது.

    இதை கருத்தில் கொண்டே 1998-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மாநில அந்தஸ்தை வலியுறுத்தினார். மத்திய அமைச்சரவையிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மாநில அந்தஸ்து கிடைப்பது முடக்கப்பட்டது.

    மத்தியில் 15 ஆண்டாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தி.மு.க. புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது 2 கட்சிகளும் புதுவை மக்களிடையே நாடகமாடுகின்றனர். மக்கள் நலன், அதிகாரம், ஜனநாயகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை அவசியமாக உள்ளது.

    இதை வலியுறுத்தி மீண்டும் பலகட்ட போராட்டங்கள் நடைபெற தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) புதுவை மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் பந்த் போராட்டம் நடைபெறும். அ.தி.மு.க. சார்பில் கட்சிகளுக்கு போராட்டத்தை ஆதரிக்கக்கோரி அழைப்பு அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வை சேர்ந்த வரலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
    • வாக்குப்பதிவு நடந்தது. இரு தரப்பினரும் 7 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. 8, அ.தி.மு.க. 4, பா.ம.க. 2, சுயேட்சை 1 கவுன்சிலர்கள் இருந்தனர்.

    பேரூராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏகே சுந்தரமூர்த்தி இருந்தார். இவர் உடல்நிலை குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார்.

    இதையடுத்து தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் இன்று பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த வரலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர் சங்கீதா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நடந்தது. இரு தரப்பினரும் 7 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர்.

    இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரான சரவணன், வரலட்சுமி பெற்றுள்ள 7 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாது என அறிவித்து சுயேட்சை வேட்பாளர் சங்கீதா வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

    இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் வாலாஜா சோளிங்கர் ரோட்டில் அம்மூர் பஸ் நிறுத்தம் நெடுஞ்சாலையில் தி.மு.க. அரசை கண்டித்தும், தேர்தல் அதிகாரியை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்து கோஷங்களை எழுப்பி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க.வினர் திடீரென ஆத்திரமடைந்து தேர்தல் நடத்தும் அலுவலரான சரவணனை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அம்மூர் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கோவை:

    சென்னையில் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் குவிந்தனர்.

    அவர்கள் திடீரென ஊர்வலமாக சென்று அவினாசி சாலை அண்ணா சிலை அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அ.தி.மு.க.வினர் யாரும் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். மொத்தம் 10 பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆர்ப்பாட்டத்தை ஒட்டி செஞ்சிலுவை சங்கம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தது.
    • ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    மின் கட்டண உயர்வை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார்.

    இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தை ஒட்டி செஞ்சிலுவை சங்கம் மற்றும் தாலுகா அலுவலகம் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகிலும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

    ×